மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவை ரூ.2 லட்சம் எப்போது? அரசின் முடிவு என்ன?
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக அரசு அகவிலைப்படியை நிலுவையில் வைத்திருந்தது. அந்த 18 மாத நிலுவை DA தொகையை அரசு ஊழியர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவை தொகை:
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,000 ல் இருந்து ரூ.26,000 ஆகவும், ஃபிட்மென்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. மத்திய ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என செய்திகள் வெளியிட்டுள்ளன. இதன் மூலம் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி ரத்து – வழக்கு விசாரணை தள்ளுபடி!
மத்திய ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவதுவதால் அவர்களின் அடிப்படை சம்பளம் உயரும். பணியாளர்கள் தற்போது 2.57 சதவீதம் என்ற அடிப்படையில் ஃபிட்மென்ட் காரணியின் கீழ் சம்பளம் பெறுகின்றனர், இது 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.8,000 என்ற அளவில் உயரும். அதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயர்த்தப்படும்.
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அணியை தேர்வு செய்யும் ரசிகர்கள்!
JCM இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முதல் நிலை ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்று முன்பு குறிப்பிட்டிருந்தது. அதேசமயம், லெவல்-13ம் நிலை ஊழியர்கள் ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900 அல்லது நிலை-14 ஊழியரின் டிஏ நிலுவைத் தொகை ரூ.1,44,200-2,18,200 ஆக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சரவை விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரே நிலுவையில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும், கோரிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போதைக்கு மத்திய அரசு ஊழியர்களின் நிலுவை தொகை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.