தமிழகத்தில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் ..பறிபோகும் பணம் – காவல் துறை எச்சரிக்கை!
ஆன்லைன் பயன்பாடுகள் மக்களுக்கு அதிக அளவில் பலனளிக்கும் விதமாக பல்வேறு அம்சங்களை வழங்கி வருகிறது. ஆனால் இதன் மூலம் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாக காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
சைபர் குற்றங்கள்:
நாடு முழுவதும் அனைத்து வகையான செயல்களுக்கும் ஆன்லைன் வழி தீர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தனிமனித தேவைகள் முதல் அரசின் சேவைகளை பெறுவது வரை அனைத்துமே ஆன்லைனில் மேற்கொள்ள வசதிகள் வந்துள்ளது. இதனால் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் அதிக அளவில் உள்ள போதிலும், மோசடிகளும் நடந்து வருகிறது. அதாவது ஆன்லைன் சூதாட்டம் ஒரு பக்கம் தலை விரித்தாடும் நிலையில், ஆன்லைனில் அந்தரங்க வீடியோ அல்லது போட்டோ மூலம் பணம் பறிக்கும் மோசடிகள் தற்போது அதிகரித்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
ஆன்லைன் டேட்டிங் ஆப்கள் மூலம் வலையில் சிக்கும் ஆண்களின் அந்தரங்க தகவல்களை வீடியோ அல்லது போட்டோவாக எடுத்துக் கொண்டு அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கின்றனர். மேலும், பெண்களை போலவே ஆண்களிடம் பேசி, சிறிது சிறிதாக பணம் கறக்க ஆரம்பித்து, இறுதியில் நம்பிக்கை வந்த பின்னர் ஒரு பெரிய தொகையை பறித்து விடுகிறார்கள். இதைப்போலவே, ஆன்லைனில் ATM மற்றும் வங்கி கணக்குகள் லாக் ஆகிவிட்டது என்று லிங்குகளை அனுப்பி அதை கிளிக் செய்தவுடன் பயனர்களின் அனைத்து விவரங்களும் ஹாக் செய்யப்பட்டு பணம் பறி போகிறது.
இரண்டாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியமா? எழும் கேள்வி.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
இது பற்றி பேசியுள்ள சைபர் காவல் அதிகாரி ஒருவர், சைபர் குற்றங்கள் தொடர்பாக சமீப காலமாக அதிக புகார்கள் பெறப்பட்டு வருகிறது. எனவே, ஆபத்து நிறைந்த சைபர் வலையில் சிக்கி கொள்ள வேண்டாம். மேலும், இது போன்ற சம்பவங்கள் மூலம் ஆன்லைனில் பணத்தை இழந்தால் உடனே, 1930 என்ற தொலைபேசி எண்ணில் புகார்களை தெரிவிக்கலாம். இதனால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, உங்கள் பணத்தை மீண்டும் திரும்ப பெரும் வாய்ப்புகள் உள்ளது என்று அறிவுறுத்தி உள்ளார்.