இரண்டாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியமா? எழும் கேள்வி.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

0
இரண்டாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியமா? எழும் கேள்வி.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
இரண்டாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியமா? எழும் கேள்வி.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
இரண்டாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியமா? எழும் கேள்வி.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பூஸ்டர் டோஸ்:

சீனாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த வைரஸ் சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவ தொடங்கி விட்டது. மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 134 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரம் – முதல்வர் இன்று ஆலோசனை!!

Follow our Instagram for more Latest Updates

இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாத மக்கள் உடனடியாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் மீண்டும் முகக்கவசம் அணிவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தற்போதைக்கு இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவையில்லை. மக்கள் அனைவரும் முதல் பூஸ்டர் தடுப்பூசியை மட்டும் கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!