தமிழகத்தில் சுங்க கட்டணம் உயர்வு – செப்.1 முதல் அமல்! வாகன ஓட்டிகள் அதிருப்தி!

0
தமிழகத்தில் சுங்க கட்டணம் உயர்வு - செப்.1 முதல் அமல்! வாகன ஓட்டிகள் அதிருப்தி!
தமிழகத்தில் சுங்க கட்டணம் உயர்வு - செப்.1 முதல் அமல்! வாகன ஓட்டிகள் அதிருப்தி!
தமிழகத்தில் சுங்க கட்டணம் உயர்வு – செப்.1 முதல் அமல்! வாகன ஓட்டிகள் அதிருப்தி!

தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டுநர்களிடம் இருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணமானது செப்டம்பர் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. கட்டண விவரம் குறித்த தகவல்களை இப்பதிவில் காண்போம்.

சுங்கக்கட்டணம்:

தமிழகத்தில் 50 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டுநர்களிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 22-ல் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டணமானது ஆண்டுக்கு 2 முறை உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதாவது ரூ.60-ல் இருந்து ரூ.70 ஆக அதிகரித்தது. அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் மீண்டும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக. 29) ‘இந்த’ பகுதிகளில் Power Cut – மின்சார வாரியம் அறிவிப்பு!

இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் உள்ள திருச்சி சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலம் பட்டி, கரூர் மணவாசி வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர உள்ளது. மேற்சொன்ன சுங்க சாவடிகள் வாயிலாக பயணிக்கும் கார், வேன்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.150 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு பேருந்து, வேன் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

உடனடியாக கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கந்த 10 ஆண்டுகளாக சுங்க சாவடிகளால் லாபம் ஏதும் இல்லாத நிலையில் இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2 வருடமாக பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அத்தகைய காலகட்டத்தில் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது வழக்கம் போல லாரிகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் சுங்க கட்டண உயர்வு அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!