நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 21,22 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 21,22 2019

முக்கியமான நாட்கள்

ஏப்ரல் 21 – தேசிய குடிமை பணிகள் தினம்

  • ஒவ்வொரு ஏப்ரல் 21ம் தேதியும் இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மிகச் சிறந்த சேவை புரிந்த அதிகாரிகளுக்கு சிறந்த பொது சேவைக்கான பிரதமர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. மூன்று பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது. தனி நபர், குழு மற்றும் அமைப்பு என்ற அடிப்படையில் குடிமைப் பணி அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்திய குடிமைப் பணியின் தந்தை என அழைக்கப்படுபவர் சார்லஸ் கார்ன்வாலிஸ் ஆவார்.

ஏப்ரல் 22 – உலக புவி தினம்

  • கலிபோர்னியாவின் கடற்கரையிலிருந்து 3500 க்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்ட 1969 சாண்டா பார்பரா எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பேரழிவைப் பார்த்த அமெரிக்க செனட்டர் கய்லார்ட் நெல்சன் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஆதரவை நிரூபிக்க முதல் புவி தினத்தை உருவாக்கினார். 2019 தீம் – ‘Protect Our Species’.

தேசிய செய்திகள்

இந்திய அரசியலமைப்பின் கொங்கனி மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது

  • இந்திய அரசியலமைப்பின், கொங்கனி மொழிபெயர்ப்பை மங்களூரில் உள்ள ரொஸாரியோ கதீட்ரல் அருகே மங்களூரு பிஷப் பீட்டர் பால் சல்டன்ஹாவால் வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பானது பேராசிரியர் ஸ்டீபன் குவாட்ரோஸ் பெர்முடே மூலமாக செய்யப்பட்டது.

சர்வதேச செய்திகள்

பெய்ஜிங்கில் வெளியுறவு செயலாளர் ‘இருதரப்பு ஆலோசனை’

  • இந்தியாவின் வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே, “இருதரப்பு ஆலோசனைகளுக்காக” பெய்ஜிங்கிற்கு வருகை தந்தார். ஜெய்ஷ்-இ- முகம்மது, பயங்கரவாத அமைப்பு நிறுவனரான, மசூத் ஆசாரை, ஒரு சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா அதன் நிலையை மதிப்பாய்வு செய்யலாம் என நம்பப்படுகிறது .

ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்பவர்கள் மீதும் பொருளாதார தடை என அமெரிக்கா எச்சரிக்கை

  • ஈரானிய எண்ணெய் இறக்குமதியாளர்கள் தங்கள் இறக்குமதியை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது அமெரிக்கா அந்த நாட்டின் மீதும் பொருளாதாரத் தடையை விதிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மற்றும் ஆறு உலக சக்தி நாடுகளுக்கு இடையேயான 2015 அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக வெளியேறிய பின்னர், நவம்பர் மாதம் ஈரானிய எண்ணெயின் ஏற்றுமதிக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை மீண்டும் கொண்டுவந்தது.

உக்ரைன் அதிபர் தேர்தல் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி

  • ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டின் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அறிவியல் செய்திகள்

IISc குழு நேரடியாக புரதங்களை உயிரணுக்களில் செலுத்துகிறது

  • பெங்களூருவின் இந்திய அறிவியல் கழக ஆராய்ச்சியாளர்கள் (IISC) புரதங்களை நேரடியாக பாலூட்டிகளின் அணுவுக்குள் செலுத்தும் ஒரு நாவல் முறையை கையாண்டுள்ளனர். புரதங்கள் பெரிய மூலக்கூறுகள் ஆகையால் அவை அணுகளுக்குள் தானாக உள்ளே நுழைய முடியாது. ஆகையால் கோவிந்தசாமி முகேஷ் தலைமையிலான குழு புரதத்தில் உள்ள ஒரு ஹைட்ரஜன் அணுவுக்கு பதிலாக ஒரு அயோடின் அணுவை சேர்த்துள்ளது, இதன் மூலம் அணுக்களில் உள்ள புரதம் ஆறு மடங்கு அதிகரிக்கிறது.

பாதுகாப்பு செய்திகள்

கடற்படை தளபதிகளின் மாநாடு

  • 2019 ஆம் ஆண்டுக்கான கடற்படை தளபதிகளின் மாநாட்டின் முதல் பதிப்பு, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 முதல் 25 வரை புது தில்லியில் திட்டமிடப்பட்டுள்ளது. துவக்க நாளில் கடற்படை தளபதிகள் இடையே பாதுகாப்புத் துறை மந்திரி உரையாடவுள்ளார்.

இந்திய, அமெரிக்க கடற்படைகள் நீர்மூழ்கிக் கப்பல் போர் பயிற்சி

  • இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகள் இந்திய பெருங்கடலில் ஒரு கூட்டு நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி நடத்தி வருகின்றன. கடற்படை ரோந்து மற்றும் உளவுத்துறையை ஒருங்கிணைப்பதற்கான அடிப்படை அமைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாட்டிலுள்ள அரக்கோணம் கடற்படை நிலையம் ராஜாளி என்ற கப்பலில் இருந்து இந்திய P-8I நெப்டியூன் விமானம் இந்த பயிற்சியில் அமெரிக்க கடற்படையுடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு செய்திகள்

மான்டே  கார்லோ டென்னிஸ்

  • மொனாக்கோவில் நடைபெற்று வந்த இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் 13-ம் நிலை வீரரான இத்தாலியின் பேபியோ போக்னி, 48-ம் நிலை வீரரான செர்பியாவின் டசன் லஜோவிச்சை எதிர்த்து விளையாடினார். இதில் பேபியோ போக்னி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019

  • கத்தார் நாட்டின் தோகா நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை அன்னுராணி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். 400 மீட்டர் ஓட்டத்தில் எம்.பி.பூவம்மா, 5000 மீட்டர் ஓட்டத்தில் பருல் சவுதரி, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் முரளி குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். ஆண்களுக்கன டிரிபிள் ஜம்ப் போட்டியில், சித்திரவேல் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஆசிய பளுதூக்கும் போட்டி

  • ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நிங்போவில் நடைபெறுகிறது. இதில் ஜெரேமி லால்ரின்னுன்கா புதிய உலக இளைஞர் மற்றும் தேசிய சாதனையைப் படைத்தார். 16 வயதே ஆன லால்ரின்னுன்கா ஆடவர் 67 கிலோ எடைப்பிரிவில் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 297 கிலோ (134+163 கிலோ) தூக்கி புதிய சாதனையைப் படைத்தார். 6 சர்வதேச சாதனைகள், 9 தேசிய சாதனைகள் என மொத்தம் 15 சாதனைகளை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் டிராபி 2019

  • பஞ்சாப் குரு நானக் ஸ்டேடியத்தில் பிகாஸ் தாபா பஞ்சாப் அணிக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வீசஸ் அணி தனது ஆறாவது சந்தோஷ் டிராபி பட்டத்தை வென்றுள்ளது.

PDF Download

ஏப்ரல் 21,22 நடப்பு நிகழ்வுகள்  வீடியோ – கிளிக் செய்யவும்

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!