தேவை ஏற்படின் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் – ஓமைக்ரான் அச்சம்! முதல்வர் தகவல்!
தேசிய தலைநகர் டெல்லியில் ஒமிக்ரான் வழக்குகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் தேவை ஏற்படின் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் புதிய கொரோனா மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உட்பட 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளை ஆக்கிரமித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் முதன் முதலாக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இருவருக்கு இந்த நோய் தொற்று உறுதியான நிலையில், இத்தொற்று பாதிப்பு டெல்லி, உத்தரகண்ட், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் போனில் டவுன்லோட் செய்வது எப்படி?
அந்த வகையில் இதுவரை 38 பேரிடம் கண்டறியப்பட்டுள்ள இந்த ஒமிக்ரான் வழக்குகளை தடுக்கும் விதமாக் பல்வேறு மாநிலங்களிலும் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய தலைநகர் டெல்லியில் ஒமிக்ரான் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்தால், நகரத்தில் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதிப்பதாக முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மீண்டும் பள்ளிகள் அனைத்தும் திறப்பு? பெற்றோர்கள், பள்ளி நிர்வாகங்கள் எதிர்பார்ப்பு!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தேவைப்பட்டால், முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதிப்போம். தற்போது வரை எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இப்போது பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை முடிந்ததும் வகுப்புகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.