கொரோனாவை தடுக்க மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல் – பீதியில் பொதுமக்கள்!
தீவு நாடான சமோவாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே நேற்று வரை ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு:
உலகம் முழுவதுமே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி பல லட்சக்கணக்கான மக்கள் பலியாயினர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது முழு நேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் தடுத்தனர். மேலும், அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் எனவும், அப்படி பொது இடங்களுக்கு வரும் போது மாஸ்க் அணிந்து தான் வர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜனவரி 1 முதல் அகவிலைப்படி அதிகரிப்பு அமல்!
மேலும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நடைமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் ஓரளவுக்கு பின்பற்றியதால் தான் கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படாத தீவு நாடான சமோவாவில் தற்போது தாறுமாறாக கொரோனா தொற்று அதிகரித்து கொண்டிருக்கிறது.
இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே ஏப்ரல் 5 ஆம் தேதி வரை சமோவாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அத்தியாவசிய பொருட்களை வாங்க வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இருப்பினும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருவதால் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை பிரதமர் ஃபியமே நவோமி மாதாஃபா நீடிக்க திட்டமிட்டு கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ஊரடங்கு குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.