மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜனவரி 1 முதல் அகவிலைப்படி அதிகரிப்பு அமல்!
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்.
அகவிலைப்படி உயர்வு
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு துறை தொழில்கள் பாதிப்படைந்தால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் 18 மாத கால நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கன்னியாகுமரியில் நாளை (ஏப்ரல் 7) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படி உயர்வை பெற்று வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் 3% உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படியை பெறுவார்கள். மேலும் தற்போது பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கர்நாடக அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தாவது, தற்போது அரசு ஊழியர்கள் 24.50% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தற்போது 2.75% அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அதன்படி தற்போது கர்நாடக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 27.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் இதனை வருகிற ஜனவரி 1ம் முதல் அமல்படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஒரு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,447 கோடி செலவினம் ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.