மாநிலத்தில் ஏப்ரல் 4 முதல் தினசரி காலை 7.30 மணி முதல் 11.30 வரை மட்டுமே பள்ளிகள் – அரசு உத்தரவு!
ஆந்திராவில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் 4 முதல் ஒரு வேளை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிகள்:
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை தாக்கத்திற்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் தொடங்கியது. நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு 10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதில் பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டியது. கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்ததால் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – ஆதாருடன் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தேர்வு நெருங்கி வரும் நிலையில் மாணவர்கள் தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நேரத்தில் ஆந்திரா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஏப்ரல் 4 முதல் ஒரு வேளை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வழக்கமாக இந்தியாவின் தென் மாநிலங்களில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் அதன் படி தற்போது ஆந்திராவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி ஒரு வேளை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 4 முதல் பள்ளிகள் காலை 7.30 முதல் 11.30 வரை மட்டுமே திறக்கப்படும்.ஏப்ரல் 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்மீடியட் தேர்வுகள் நடைபெறும் என்று ஆந்திர மாநிலக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 40 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நேரத்தில் அரசின் அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.