தமிழகம் முழுவதும் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு – இன்று முதல் மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி!
தமிழக அரசு முன்னதாக கொரோனா மற்றும் ஓமைக்ரான் தாக்கத்தின் பாதிப்புகளை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது.
கூடுதல் தளர்வுகள்:
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று முதல் மற்றும் 2ம் அலை என்று மாறி மாறி பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதனால் அனைத்து பொது நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து தொழில் மற்றும் சுற்றுலா துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் விளைவால் தீவிரமான பொருளாதார சரிவு ஏற்பட்டது. நோய்த்தொற்றின் பாதிப்புகள் குறைந்து வருவதை அடிப்படையாக கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டும், நீக்கப்பட்டும் வருகின்றது.
மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு மீண்டும் அமல் – தொடக்க பள்ளிகளை திறக்க அனுமதி!
முன்னதாக பிப்ரவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழகத்தில் இறுதியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருந்தது. பிப்ரவரி 15ம் தேதி கட்டுப்பாடுகள் முடிவிற்கு வருவதால் கடந்த 13ம் தேதி அன்று தமிழக முதல்வர் முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்து பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரையிலான நாட்களுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்தார். இந்த அறிக்கையில் முன்னதாக அமலில் இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டது. மேலும் தடை விதிக்கப்பட்டிருந்த விளையாட்டு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அரசின் அறிக்கையின் படி,
- திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 200 பேர் வரை பங்கேற்கலாம்.
- நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
- பொருட்காட்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், உணவகங்கள், விடுதிகளில் 100 சதவீதம் பேர் அமர்ந்து உணவு அருந்தலாம்.
- உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்களும் முழுமையாக செயல்படலாம்.
- திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களும் இன்று முதல் அனுமதிக்கப்படுகின்றனர்.
- சலுான்கள் மற்றும் அழகு நிலையங்கள் போன்றவைகளும் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் இன்று முதல் செயல்படவுள்ளன.