தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளை திறக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அத்துடன் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் கடந்த 1ம் தேதி அன்று 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

சென்னைவாசிகள் கவனத்திற்கு – பிப்.19ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை!

இந்த தளர்வுகள் இன்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் சில தளர்வுகளை தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதில் தற்போது திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Office சூப்பர் சேமிப்பு கணக்கை ஆன்லைனில் தொடங்குவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

மேலும் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது நாளை முதல் நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆன்லைன் வழியாக கல்வி கற்று வந்த நாளை பள்ளிக்கு செல்ல உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஆசிரியர்களை நேரில் பார்க்கும் சூழ்நிலையும் அத்துடன் ஆசிரியர்களின் அன்பும் பரிவும் குழந்தைகளுக்கு கிடைக்கும் என்பதால் பெற்றோர்களும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!