மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு மீண்டும் அமல் – தொடக்க பள்ளிகளை திறக்க அனுமதி!

0
மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு மீண்டும் அமல் - தொடக்க பள்ளிகளை திறக்க அனுமதி!
மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு மீண்டும் அமல் - தொடக்க பள்ளிகளை திறக்க அனுமதி!
மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு மீண்டும் அமல் – தொடக்க பள்ளிகளை திறக்க அனுமதி!

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று (பிப்.16) முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

மாநிலம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் 3வது அலை பாதிப்புகள் குறைந்து வருவதால் மேற்கு வங்க அரசு அனைத்து தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளையும் பிப்ரவரி 16 முதல் மீண்டும் திறக்க அனுமதி அளித்தது. இதனுடன் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் பள்ளிக்கல்வி துறையால் வழங்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) பின்பற்றி இன்று (பிப்.16) முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது.

ராமமூர்த்திக்கு பணிவிடை செய்யும் பாக்கியா, புதிய போன் கோபிக்கு பரிசளித்த ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இப்போது மேற்கு வங்க மாநிலத்தில், சுமார் இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு கீழ் வகுப்பு பிரிவுகளுக்கான நேரடி பள்ளிகள் இன்றுடன் துவங்கி இருக்கிறது. இதனுடன் அனைத்து ICDS மையங்களும் ஒரே நாளில் திறக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தற்போது நடைமுறையில் உள்ள இரவு நேர முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் அரசு நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொரோனா நிலைமையை முழுமையாக மதிப்பிட்ட பின்னரே ஜூனியர் வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இதை தொடர்ந்து பள்ளிகளை திறக்கும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதற்கிடையில் மற்றொரு கொரோனா மாறுபாட்டின் சாத்தியக்கூறுகள் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் பொது மக்கள் கவனமாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பிப்ரவரி 3 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் மீண்டுமாக துவங்கியது. தற்போது கூடுதலாக, 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு திறந்தவெளி வகுப்புகள் என்ற புதிய முயற்சியை அரசாங்கம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!