தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்!

0
தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு - இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்!
தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு - இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்!
தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை கொரோனா பரவல் உள்ளதால் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய முடிவுகள் – முதல்வர் இன்று ஆலோசனை!

இதனால் நோய் தாக்கம் அதிகமுள்ள பகுதிகள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் மக்கள் கூட்டம் அதிகம் சேரும் இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனியாக கடைகளை பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது பிசினஸ் தொடங்க உள்ள பாக்கியா, முதல் வாடிக்கையாளராக சேர்ந்த ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

அனைத்து கடைகளிலும், நுழைவாயில்களில் கை சுத்திகரிப்பான் கட்டாயம் வைக்கப்படுவதுடன், உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பாளர்களை தொடர்ந்து பொதுமக்களிடையே ஏற்படுத்தி தொற்று நோய் பரவலை தடுக்க முன்மாதிரி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!