ஹரியானாவில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு – CA தேர்வுகளை நடத்த அனுமதி!
ஹரியானாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஜூலை 12 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டிப்பதாக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் மாநிலத்துக்குள்ளாக நடத்தப்படும் சில போட்டித்தேர்வுகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடுகளாக மாநிலம் தழுவிய முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் விதிகளின் கீழ் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஹரியானா தலைமைச் செயலாளர் விஜய் வர்தன் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் பிறப்பித்த உத்தரவின்படி, ‘ஹரியானா மாநிலத்தில் ஜூலை 12 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை, முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!
இந்த பொதுமுடக்க காலத்தில் பட்டய கணக்காளர் தேர்வுகளை (CA) ஜூலை 5 முதல் 20 ஆம் தேதி வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது’ என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுகளின் போது, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் வெளியிட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை தேர்வு மையங்கள், தேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ராணுவ பணிக்கான பொது நுழைவுத் தேர்வை ஹிசார் ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம், ஹிஸார் ராணுவ நிலையம் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகளின் போதும் சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தவிர ஹரியானா முழுவதும் கடைகள், மால்கள், உணவகங்கள், மத இடங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள், திருமணங்கள், இறுதி சடங்குகளுக்காக கொடுக்கப்பட்ட தளர்வுகள் தற்போதுள்ளபடி கடைபிடிக்கப்படும். அதன் படி அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையும், மால்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும், ஹோட்டல் மற்றும் உணவகங்கள், பார்கள் காலை 10 மணி முதல் 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகின்றன. முன்னதாக ஹரியானாவில் மே 3ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கானது தற்போது ஜூலை 12 வரை ஒன்பதாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.