தமிழகத்தில் ஓமைக்ரான் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்? முதல்வர் ஆலோசனை!

0
தமிழகத்தில் ஓமைக்ரான் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் ஓமைக்ரான் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் ஓமைக்ரான் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்? முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதனால் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க இன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

ஊரடங்கு அமல்?

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 600 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் தமிழகத்தில் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் எவ்வித இடையூறும் இன்றி நல்ல முறையில் இயங்கி வருகின்றது. இதுவரை பள்ளிகளில் சுழற்சி முறையில் நடைபெற்று வருகின்ற வகுப்புகள் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் சுழற்சி இன்றி தினசரி வகுப்புகள் நடக்கும் விதமாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் டிச.25 முதல் ஜன.2 வரை அரையாண்டு விடுமுறைகள் ரத்து? தனியார் பள்ளிகள் கோரிக்கை!

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தீவிரமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வகை தற்போது தமிழகத்தில் 34 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஓமைக்ரான் தொற்று மற்ற உருமாறிய கொரோனா வகைகளை விட வீரியம் மிக்கதாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பாதிப்புகளின் அடிப்படையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள டில்லியில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.

TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டம், தேர்வு மாதிரி வெளியீடு!

இந்தியாவில் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகம் 3வது இடத்தை பிடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஓமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக எவ்வித நடவடிக்கை என்பது குறித்து இன்று காலை 11.30 மணியளவில் மருத்துவ குழுவுடன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!