தமிழகத்தில் டிச.25 முதல் ஜன.2 வரை அரையாண்டு விடுமுறைகள் ரத்து? தனியார் பள்ளிகள் கோரிக்கை!
தமிழகத்தில் நாளை (டிச.25) முதல் ஜன.2ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடுமுறையை எதிர்த்து தனியாா் பள்ளி நிா்வாகங்கள் மற்றும் பெற்றோா்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பள்ளி விடுமுறை
தமிழகத்தில் கொரோனா 2ம் பரவல் ஓய்ந்து வந்ததையடுத்து கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதம் முதல் தேதிகள் முறையே 9 லிருந்து 12ம் வகுப்புகளுக்கும், 1 லிருந்து 8 வரையுள்ள வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது. ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கான இந்த கல்வியாண்டு தாமதமாக துவங்கி இருக்கும் நிலையில், கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்ட விடுமுறைகள் கனமழை காரணமாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து வழக்கமாக இந்த மாதத்தில் மேற்கொள்ளப்படும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமே திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான பள்ளிகளுக்கும் நாளை (டிச.25) முதல் ஜனவரி 2ம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் நேற்று (டிச.23) அறிவித்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பை எதிர்த்து தனியாா் பள்ளிகளின் நிா்வாகங்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பெற்றோா்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது, ‘தமிழகத்தில் கிட்டத்தட்ட 20 மாதங்கள் கழித்து பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கனமழை காரணமாக நவம்பர் மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டுமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது ஏற்புடையதல்ல’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை சித்ரா இடத்தில் காவ்யா – ஒரு வருடம் நிறைவு!
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், CBSE பள்ளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் கே.ஆா்.நந்தகுமாா் கூறுகையில், ‘தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவலால் பள்ளிகளை மீண்டும் மூடக்கூடிய அச்சம் நிலவி வருகிறது. இந்த சூழலில் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டால், மாணவர்களின் கற்றல் திறன் மென்மேலும் பாதிக்கப்படும். இன்னும் ஒரு சில மாதங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு அரையாண்டு விடுமுறையை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்