ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஊரடங்கு அமல் – இலங்கை அரசு உத்தரவு!

0
ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஊரடங்கு அமல் - இலங்கை அரசு உத்தரவு!
ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஊரடங்கு அமல் - இலங்கை அரசு உத்தரவு!
ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஊரடங்கு அமல் – இலங்கை அரசு உத்தரவு!

இலங்கையில் ஆகஸ்ட் 30ம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அமலுக்கு வருவதாக இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு அமல்:

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த 2020 முதல் அச்சுறுத்தி வருகிறது. ஒரு முழு ஆண்டாக கொரோனா வைரஸில் மற்றம் ஏதும் அடையவில்லை. ஒரு ஆண்டிற்கு பிறகு கொரோனா வைரஸ் உருமாறி அதிக வீரியத்தில் மீண்டும் பரவ தொடங்கி இருக்கிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தீவிர கொரோனா நோய் கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகின்றது. தடுப்பூசி போடும் பணிகளும் விரைவு படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் செப்.,15ல் திறப்பு – அரசு அறிவிப்பில் தகவல்!

இந்நிலையில், இலங்கையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 3,77,973 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இலங்கையில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் 10 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு கடந்த 19ம் தேதி இரவு 10 மணி முதல் வரும் 30ம் தேதி அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும்.

TN Job “FB  Group” Join Now

இருப்பினும், விவசாயம், ஆடை, கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மற்றும் தடுப்பூசி மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 60 வயதினருக்கு மேலானவர்களுக்கு கொரோனா தொற்றினால் இறப்புகள் அதிக அளவில் ஏற்படுவதால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் முன்னுரிமை அடிப்படையில் போட இருக்கிறோம் என்று அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!