தமிழகத்தில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் செப்.,15ல் திறப்பு – அரசு அறிவிப்பில் தகவல்!
தமிழகத்தில் உள்ள உயர்வகுப்புகளுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உள்ள நிலையில், மீதமுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் மெல்ல குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், கடந்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்து வரும் மற்ற மாநிலங்களில் பள்ளிகளை திறப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் விண்ணப்பம் – மத்திய அரசு அறிவிப்பு!
தமிழகத்திலும் பாதிப்புகள் காரணமாக அறிவித்திருந்த ஊரடங்கு ஆகஸ்ட் 23ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், தற்போதும் தமிழகத்தில் 1,600 க்கும் மேல் உள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 6ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 முதல் 12 ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் திறக்க உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் உள்ள மழலையர் பள்ளிகள் முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளும் திறப்பது பற்றி அரசு ஆலோசித்து வருவதாகவும், உயர்வகுப்புகள் செயல்பாடுகளை கண்காணித்த பின்னர், எல்.கே.ஜி முதல் 1 முட்டைஹல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து அறிவிக்க உள்ளதாக முதல்வரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.