கிரெடிட், ATM கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – ஜனவரி 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!
ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மிக பாதுகாப்பானதாக மாற்ற ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டோக்கனைசேஷன் என்ற ஒரு புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி:
2022ம் ஆண்டு வரவுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி பண பரிவர்த்தனைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பண பரிவர்த்தனைகள் போது வாடிக்கையாளர்கள் கிரிடிட், டெபிட் கார்டு விவரங்களை பதிவிடுவதில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்தும் போது, கார்டின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஒன்-கிளிக் பேமெண்ட் போல, நீங்கள் ஆன்லைனில் ஏதாவது வாங்க முயற்சித்தால், முன்கூட்டியே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் விவரத்தை அதுவே பதிவிடும்.
புதுக்கோட்டை சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 – நேர்காணல் மட்டுமே..!!
இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு அதன் படி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் கார்டு விவரங்களை ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் போது பதிவிட வேண்டும். வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களை 2022ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து சேமித்து வைக்கக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. அதற்கு பதிலாக பண பரிவர்த்தனைகளை மிக பாதுகாப்பானதாக மற்றும் வகையில் தற்போது டோக்கனைசேஷன் என்ற ஒரு புதிய விதியை கொண்டு வந்துள்ளது. கார்டு விவரம் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பை 2022 – திடீர் மாற்றம்!
மேலும் கார்டு எண், CVV உள்ளிட்ட எந்த விவரமும் மூன்றாம் தரப்பு அமைப்பு அல்லது செயலிகளுக்குத் தெரிய வராது. ங்கள் கார்டுக்கு பதிலாக, உங்கள் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் டோக்கன் எண்ணை உள்ளிட்டால் போதும். ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் 2020 மாதம் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 2022ம் முதல் ஏடிஎம் இயந்திங்களில் பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்தி உள்ளது.