ஆகஸ்ட் 26 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு – கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஆகஸ்ட் 26 ம் தேதி 2021 – 2022 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மாணவர்கள் தங்கள் தரவரிசையை கல்லூரி இணையத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கலந்தாய்வு :
தமிழகத்தில் கடந்த ஜூலை 19ஆம் தேதியன்று 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு முறையிலான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. நடப்பு ஆண்டு கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் நேரடி மாணவர்கள் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. கல்லூரிகளில் தங்கள் குழந்தைகளை சேர்பதற்காக பெற்றோர்களும், மாணவர்களும் கூட்டம் கூடுவர், இதனால் தொற்று மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும் என்பதால் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்றது.
அஞ்சலகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் – நிரப்ப வலியுறுத்தல்!
அதன்படி கடந்த ஜூலை 26 ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. தற்போது மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்து விட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்தது. அதன்படி உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஆகஸ்ட் 26 ம் தேதி 2021 – 2022 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 26 ம் தேதி முதல் சிறப்பு பிரிவினர், மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி பொது பிரிவினருக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். மாணவர்கள் சேர்க்கையின் போது மாணவர்கள் கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், புகைப்படம், இணையத்தில் விண்ணப்பித்ததற்கான சான்று ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தரவரிசை பட்டியலை கல்லூரி இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் சேர்க்கை பெற்ற அன்றே கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.