TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – பிப்.15ம் தேதி கலந்தாய்வு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கான 3ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பற்றிய அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
3ம் கட்ட கலந்தாய்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வு மூலமாக அரசுப் பணிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2,2ஏ,குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்த சூழலில் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்திலும் அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு – இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்!
கொரோனா பரவலுக்கு முன்பு கடந்த 2019ம் ஆண்டு செப்.1ம் தேதி ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இத்தேர்வுகளுக்கு நடைபெற இருந்த 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி அவர்கள் 3ம் கட்ட கலந்தாய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் கூறியதாவது, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான 3ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற பிப்ரவரி 15ம் தேதி அன்று நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்த கலந்தாய்வு சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே உள்ள TNPSC அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் விவரங்களை TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தர வரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இந்த 3ம் கட்ட கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதத்தை பெற விரும்புவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த கலந்தாய்வு குறித்த அழைப்பு கடிதத்தை விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் வழங்கப்பட மாட்டாது.