தமிழகத்தில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு – இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்!
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கொரோனா தினசரி பாதிப்பு குறையாத நிலையில் இன்று முதல் பிப்ரவரி 15 வரை பின்பற்ற வேண்டிய புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் முதல்வர் உத்தரவின் படி ஜனவரி 31 வரை இரவு ஊரடங்கு ,வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு, பள்ளி கல்லூரிகள் விடுமுறை ஆகியவை அமலில் இருந்தது. இந்நிலையில் அண்மையில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், கடந்த 28 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு நீக்கபடுவதாகவும், கடந்த ஞாயிறு (ஜனவரி 30) முழு ஊரடங்கு கிடையாது மற்றும் பிப்ரவரி 1(இன்று) முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் நலன் அடிப்படையில் இன்று முதல் பிப்ரவரி 15 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
1. நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்.
2.மழலையர் விளையாட்டு பள்ளிகள் , நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை மற்றும் சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை.
3.பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை மற்றும் அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் தடை.
4. உணவகங்கள், விடுதிகள்,தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதி.
5. திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதி. இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
6.துணிக்கடைகள் மற்றும் நகைக் கடைகளில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர் மட்டும் அனுமதி.
7.கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள் உணவகங்கள் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி மற்றும் உடற்பயிற்சி கூடங்கள்,யோகா பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.