இந்தியாவில் வீரியமெடுக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 49 இறப்புகள் பதிவு!
இந்தியாவில் கொரோனா பரவல் அதிக வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 49 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். இதனால், மத்திய அரசு தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறது.
கொரோனா பரவல்:
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடியே தான் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 19,406 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் நாட்டில் தற்போது வரைக்கும் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.41,26,994 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1,34,793 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, ஒரே நாளில் 49 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதனால், நாட்டில் இதுவரைக்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,649 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரைக்கும் பார்க்கும் போது தற்போது உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டுமே நாட்டில் 5.67 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் மற்றும் ஜூலை மாதத்தில் 1,241 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. நாளுக்கு நாள் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
மீண்டும் தீவிரமடையும் குரங்கு அம்மை நோய் – மத்திய சுகாதாரத்துறையின் முக்கிய அறிவுறுத்தல்
அதே நேரத்தில், இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதாவது, பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் 75 நாள்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான காலம் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நிறைவடைகிறது. இதனால், இலவச பூஸ்டர் தடுப்பூசிக்கான காலம் முடிவடைவதற்குள் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 32,73,551 பேர் கோவிட் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.