உலகில் முதல்முறையாக குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – கியூபா அறிமுகம்!
உலகம் முழுவதும் குழந்தைகளுக்கான தடுப்பூசி கண்டறியும் பணிகள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் கியூபாவில் நேற்று 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
கடந்த 2019ம் ஆண்டு முதல் கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அலை என உலகையே உலுக்கி வந்த நிலையில் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். நாளுக்கு நாள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிரிழப்புகள் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகித்தது.
ஒரு வாரம் பள்ளி மூடல் – 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று!
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் பெரும் பங்காற்றி வந்தன. இந்தியாவில் முதற்கட்டமாக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தியாவிலும் இந்நடைமுறை அமலுக்கு வந்தது.
WhatsApp செயலியில் Profile & Online வசதியை மறைக்கும் அம்சம் – புதிய அறிமுகம்!
கொரோனா 3ம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என கூறப்பட்ட நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகிலேயே முதல் முறையாக இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி கியூபாவில் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அப்டாலா மற்றும் சோபிரனா எனும் இரு தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனை முடிவடைந்துள்ள நிலையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியது கியூபா. அதனை தொடர்ந்து நேற்று முதல் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த கொரோனா தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.