18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – ஒன்றிய சுகாதார அமைச்சர்!
கொரோனா 3ம் அலை குழந்தைகளை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
சைகோவ் – டி தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்தது. இதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் நோய்த்தொற்று பரவும் விகிதத்தை குறைக்க மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் அலையின் காரணமாக பலி எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து அரசு மக்களுக்கு தடுப்பூசி வழங்கி வந்தது.
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
இரண்டாம் அலையை தொடர்ந்து வரும் மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாரத் பயாடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயதுடையோருக்கான மூன்றாம் கட்ட பரிசோதனை செப்டம்பரில் தொடங்கும் என அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி போட ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளது. குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆராய்ச்சியை மேற்கொள்ள ‘சைடஸ் காடிலா’ மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் அடுத்த மாதத்தில் தெரியவரும் என குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கூறினார். அந்நிறுவனத்தின் சைகோவ் – டி தடுப்பூசியை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.