தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – உயர்நீதிமன்றம் வைத்த செக்!
தமிழக அரசு ஊழியர்கள் இனிமேல் பதவி உயர்வு குறித்து ஓர் உரிமையும் கேட்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழக அரசு ஊழியர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர் .
அரசு ஊழியர்கள்:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவி இந்தியாவை மட்டும் இல்லாமல் உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் புரட்டி போட்டது. அடுத்தாக மூன்றாவது அலையும் முடிந்து தற்போது தான் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அரசின் சார்பில் மிகப் பெரிய அளவில் சலுகைகளை வழங்கி உள்ளது. இப்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு சலுகைகளும் அதிகரித்துள்ளது. அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்குப் பிறகு ஊழியர்களின் சம்பளமும் அதிகரிக்கும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – நாமினியை இணைக்கும் எளிய வழிமுறைகள்!
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் டிஆர்ஓவாக பணியாற்றும் முத்துராமலிங்கம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஐஏஎஸ் பதவி உயர்வுக்கான தகுதி எனக்கு உள்ளது. டிஆர்ஓக்களுக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்குவது குறித்து மத்திய அரசின் ஆய்வுக்குழு தான் முடிவு செய்யும். இக்குழுவின் கூட்டத்தை கூட்டவும், எனக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வழங்கிய தீர்ப்பு என்னவென்றால், அரசு பொது ஊழியர்கள் தங்களுக்கான பதவி உயர்வை ஓர் உரிமையாக கேட்க முடியாது. பதவி உயர்வு என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று தான். அதே நேரம் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியான நபர்களை நிர்வாகம் தான் தேர்வு செய்யும். பதவி உயர்வு பெற தகுதி இருந்தாலும், தனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென நிர்வாகத்திடம் கேட்க முடியாது. மத்திய ஆய்வுக்குழு கூட்டம் நடந்திருந்தால் தனக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கும் என்பது கற்பனையானது. எதிர்கால நிகழ்வுகள் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது.
இது தவிர, டிஆர்ஓக்களுக்கான பதவி உயர்வு குறித்து மத்திய அரசு மட்டும் தான் முடிவெடுக்க முடியும். இதற்காக ஆய்வுக் குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதை உரிமையாக கோர முடியாது. பணியிடங்களை நிரப்புவது, பதவி உயர்வு வழங்குவது என்பது நிர்வாக ரீதியான முடிவாகும். அது அரசின் சிறப்புரிமை. எனவே, குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்புமாறும், பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட கோர முடியாது என்பதால் மனுதாரர் கேட்கும் நிவாரணத்தை வழங்க முடியாது என்று அறிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.