கொரோனாவிற்கு பூஸ்டர் தடுப்பூசி அவசியமா? மத்திய குழு இன்று ஆலோசனை!!

0
கொரோனாவிற்கு பூஸ்டர் தடுப்பூசி அவசியமா? மத்திய குழு இன்று ஆலோசனை!!
கொரோனாவிற்கு பூஸ்டர் தடுப்பூசி அவசியமா? மத்திய குழு இன்று ஆலோசனை!!
கொரோனாவிற்கு பூஸ்டர் தடுப்பூசி அவசியமா? மத்திய குழு இன்று ஆலோசனை!!

நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதனை தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்த தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி:

உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவியது. அதன் பின்னர் அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கின. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் அனுமதிக்கப்பட்டு 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு தடுப்பூசி செலுத்துவதால் பல்வேறு பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளி விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! கனமழை எதிரொலி!

அதனை தொடர்ந்து இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பல பகுதிகளில் கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொரோனா தொற்று 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய கொரோனா தொற்று பரவல் 3 வது அலையை உணர்த்துவதாக கருதி அனைத்து நாடுகளும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 3 வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியுள்ளன.

தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில் இந்தியாவில் 3வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து நவம்பர் இறுதியில் முடிவு செய்யப்படும் என்று ஏற்கனவே என்.டி.ஜி.ஐ. அமைப்பு தெரிவித்திருந்தது. தற்போது உருமாறிய கொரோனா வகையாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று பரவலை கருத்தில் கொண்டு தேவைப்படுபவர்களுக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப வல்லுநர் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!