தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளி விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! கனமழை எதிரொலி!
தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டும் இன்று (டிச.6) கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பரவலான மழை காணப்பட்டு வருகிறது. இந்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட சில மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்திருக்கிறது. இப்போது இந்த தொடர் மழையானது இந்த வாரமும் தொடர்ந்திருக்கும் நிலையில், தென் பகுதியை சேர்ந்த சில மாவட்டங்களுக்கு மட்டும் இன்று (டிச.6) கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு!!
ஏற்கனவே கனமழை எதிரொலி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (டிச.6) கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இப்படி இருக்க கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக கரூர் மாவட்ட பொதுப்பணித்துறையை சேர்ந்த 19 குளங்கள் 60% அளவுக்கு நிரம்பி இருக்கிறது.
ஒமைக்ரான் வைரஸ் பரவல், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? சுகாதார துறை செயலாளர் பேட்டி!
தொடர்ந்து இம்மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 107 சிறு பாசன குளங்களும் 75% மும், 833 குளங்களில் 3 குளங்கள் 100% மும் நிரம்பி உள்ளன. தவிர சிறிய குளங்கள் மற்றும் ஊரணிகளும் 75% என்ற அளவுக்கு நிரம்பி உள்ளன. இந்நிலையில் கரூர் மாவட்டத்திற்கு மீண்டுமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று (டிச.6) ஒரு நாள் மட்டும் பள்ளிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.