தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு வழங்க உரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் சுமார் 4.41 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் தொகுப்பு:
தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டு சில வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் தொகுப்புடன் பொங்கல் பரிசாக ரொக்க பணமும் இதுவரை வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவியது. இந்நிலையில் திமுக தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான முக. ஸ்டாலின் அவர்கள் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழக அரசில் தொகுப்பூதியத்துடன் வேலை – 49 காலிப்பணியிடங்கள்
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை மற்றும் சில மளிகை பொருட்களுடன் துணிப்பை அடங்கிய 20 பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ஒரு முழு கரும்பும் சேர்த்து வழங்கும் விதமாக ரூ.71.10 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு டிச.4ம் தேதி அன்று அரசாணை வெளியிட்டது.
ஒமைக்ரான் வைரஸ் பரவல், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? சுகாதார துறை செயலாளர் பேட்டி!
அதனை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 41 ஆயிரத்து 190 ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் முகாம்களில் உள்ள 365 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 555 ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 வகையான பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.