தமிழக அரசில் தொகுப்பூதியத்துடன் வேலை – 49 காலிப்பணியிடங்கள்
தமிழக அரசு சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் Security Guard பணியிடங்கள் குறித்த முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பிக்க நாளை இறுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணிவாய்ப்பு:
தமிழக அரசு சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியாகியுள்ளது. தற்போது திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 49 Security Guard பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் ஊதியம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் கடைசி தேதியான நாளைக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
தகுதிகள்:
தமிழக அரசு சார்பில் வெளியாகியுள்ள Security Guard பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகுறித்த தகவல்களை அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TN’s Best Coaching Center
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7,300 வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பம்:
விண்ணப்பதாரர்கள் தேர்வு மூலமோ அல்லது நேர்முக தேர்வு மூலமோ தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர் அதிகாரபூர்வ இணையத்திற்கு சென்று அதன் விண்ணப்பத்தினை தேர்வு செய்து சரியான முகவரிக்கு கடைசி தேதிக்குள் அனுப்புமாறு கூறப்படுகிறது. நாளை டிசம்பர் 7 பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாகும். அதன்பின்னர், பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.