தமிழகத்தில் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!!
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே 20) துவங்கி வைத்துள்ளார்.
தடுப்பூசி திட்டம்:
கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. முன்னதாக முன்களப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் போன்றவர்களுக்கு கொரோனா முதல்கட்ட தடுப்பூசிகளும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.2000 நிதியுதவி – முழு விபரம் இதோ!!
இந்த நிலையில் மூன்றாம் கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (மே 20) தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள முதல்வர் முக ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் படி முதல்வர் சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்டும், தடுப்பூசி போடும் திட்டத்தை துவங்கி வைக்கவுள்ளார்.
TN Job “FB Group” Join Now
தற்போது திருப்பூர் பகுதியில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வரும் முதல்வர் முக ஸ்டாலின் திருப்பூரில் உள்ள நேதாஜி ஆயுத ஆடை பூங்காவில் தடுப்பூசி திட்டத்தை துவங்கி வைத்துள்ளார். அதன் படி மாநிலம் முழுவதும் இன்று முதல் 18 முதல் 44 வயது வரையுள்ள 3.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.