நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.2000 நிதியுதவி – முழு விபரம் இதோ!!
பிரதம மந்திரியின் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிதி உதவி விவசாயிகளின் வங்கி கணக்குக்கு செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை அறிந்து கொள்ளும் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
விவசாய நிதி:
இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியானது ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தப்பட்டு விடும்.
TN Job “FB Group” Join Now
அதன் படி கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 8ஆவது தவணை நிதி மே 14 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்து முடிந்த ரம்ஜான் தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி சுமார் 10 கோடி பேருக்கு விவசாய நிதி உதவியை வழங்கும் திட்டத்தை காணொளி வாயிலாக நடத்தினார். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 20,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவியை பெறுவதற்கு:
- பயனாளர்களின் பெயர் pmkisan.gov.in என்ற இணையதளத்தில் இணைந்துள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
- பிறகு MENU BAR ல் உள்ள Farmers corner என்பதை கிளிக் செய்யவும்.
- அதில் Beneficiary list என்பதில் உள்நுழைய வேண்டும்.
- பிறகு உங்கள் மாநிலம், மாவட்டம், பிரிவு, கிராமத்தின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.
- இறுதியாக Get information என்பதை கிளிக் செய்தால், இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் பெயர் விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பணம் வந்ததா என்பதை தெரிந்து கொள்ள:
விவசாய நிதி உதவித்திட்டத்தின் கீழ் பணம் கிடைக்கவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அரசின் ஹெல்ப் லைன் எண்களுக்கு அழைத்து புகார்களை தெரிவிக்கலாம். மேலும் மத்திய அரசின் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம். அதன் படி,
- பிஎம் கிசான் டோல் ஃப்ரீ நம்பர் – 18001155266
- பிஎம் கிசான் ஹெல்ப் லைன் நம்பர் – 155261
- பிஎம் கிசான் லேண்ட் லைன் நம்பர் – 011-23381092, 23382401
- பிஎம் கிசான் புதிய உதவி எண் – 011-24300606
- பிஎம் கிசான் ஹெல்ப் லைன் – 0120-6025109