தமிழகத்தில் 98 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் இதுவரை 98 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஏராளமான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் தொடர்ந்து தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் பாதிப்புகள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அதனால் அரசு ஊரடங்கை அறிவித்து கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மக்கள் வெளியில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டார்கள்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸ்களாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி கொரோனாவிலிருந்து நம்மை காக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் 18 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசிகள் அனுப்பக்கோரி தமிழக மருத்துவ கழகம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதுவரை தமிழகத்தில் 98 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து இதுவரை மொத்தம் 1.06 கோடி கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது. தலைநகர் சென்னையில் தற்போது வரை 21,63,200 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மாற்றுத் திறனாளர்களுக்கு நேரடியாக வீடுகளுக்கு சென்று 5000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் உள்ளவர்களுக்கு இதுவரை 9,555 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 2,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.