சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா பரவலின் எதிரொலியாக தற்போது கேரள மாநிலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாட்டில் தற்போது கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் இருந்து வருவதால் தற்போது சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 14 முதல் பேருந்துகள் 50% பயணிகளுடன் இயக்கம் – புதிய தளர்வுகள் அறிவிப்பு!
ஏற்கனவே, தளர்வுகளுடன் கூடிய உத்தரவு அமலில் இருக்கையில் இந்த உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு கேரளாவில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்தது வருகின்றனர். அதே போல் 100க்கும் அதிகமானோர் மரணம் அடைந்து வருகின்றனர்.
புதிய கட்டுப்பாடுகள்:
- உணவகங்களில் இந்த இரு தினங்களும் பார்சல் சேவைகள் நிறுத்தபட்டுள்ளது. உணவுகள் டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- கட்டுமான பணிகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும், பணியாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியினை பின்பற்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- அனைத்து சுற்றுலா தலங்களும் தடுப்பூசி மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.