ஜூன் 14 முதல் பேருந்துகள் 50% பயணிகளுடன் இயக்கம் – புதிய தளர்வுகள் அறிவிப்பு!
ஹிமாச்சல் பிரதேசத்தில் முழு நேர ஊரடங்கு உத்தரவில் இருந்து சில தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஜூன் 14 முதல் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது. அதன் படி ஹிமாச்சல் பிரதேசத்தில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் அத்தியாவசிய கடைகள் அனைத்தும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
வார இறுதிநாள் & இரவு நேர முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
தவிர வார இறுதி நாட்களில் இந்த அனைத்து கடைகளும் மூடப்படும் என்று முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஜூன் 14 முதல் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர ஹிமாச்சல் பிரதேசத்துக்குள் நுழைவதற்கு கொரோனா பரிசோதனைகள் இனி கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 50 சதவீத பணியாளர்களுடன் இன்ட்ராஸ்டேட் பஸ் சேவைகளை மீண்டும் துவங்க மாநில அரசு முடிவு செய்தது.
TN Job “FB Group” Join Now
அனைத்து மருத்துவ கல்லூரிகள், ஆயுர்வேத கல்லூரிகள் ஜூன் 23 முதல் திறக்கப்படும். மருந்தகம் மற்றும் நர்சிங் பள்ளிகள் ஜூன் 28 முதல் திறக்கப்படும். திருமண விழாவில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படும். இதற்கிடையில் அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 957 நோயாளிகள் நோய் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.