தமிழகத்தில் 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி மாணவர் சேர்க்கை – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாததால் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டாலும் தேர்வுகள் நடத்தப்படாத காரணத்தினால் உயர் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்க பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வழங்க 10 ஆம் வகுப்பு மதிப்பெண், 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தயார் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 98 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி – அமைச்சர் விளக்கம்!
இந்நிலையில் வழக்கமாக 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு தேர்வுகள் நடத்தப்படாத காரணத்தினால் எவ்வாறு மாணவர் சேர்க்கை நடத்துவது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி தமிழகத்தில் உள்ள 51 அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதே போல பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து குழு அமைக்கப்பட்டு ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.