15 முதல் 18 வயதுடையோருக்கு கொரோனா தடுப்பூசி தயார் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் 15 முதல் 18 வயதிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாராக இருக்கிறது என பாகிஸ்தான் அரசு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வந்த காரணத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஊரடங்கு அமல்படுத்தப்படதை தொடர்ந்து நோய் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. முதல் மற்றும் இரண்டாம் அலையை தொடர்ந்து கொரோனா 3ம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறந்த அன்லிமிடெட் பிளான்கள்! முழு விபரம் இதோ!
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,988 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாகிஸ்தானில் 1,207,508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 26,787 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானை தொடர்ந்து பஞ்சாபில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. 24 மணி நேரத்தில் 1208 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
IPL Countdown 2021: இந்த முறை ரஸல் ராக்கெட் வெடிக்குமா? மோர்கனின் படை தயார்!!
இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இப்போது 15 வயது முதல் 18 வயதிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாராக இருக்கிறது. நீங்கள் 15 முதல் 18 வயதுடையவர்கள் என்றால் ஃபைசர் பயோ என் டெக் தடுப்பூசிக்காக 1166 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி பதிவு செய்து கொள்ளுங்கள். குழந்தைகள் பதிவு விண்ணப்பம் பயன்படுத்தி Child Registration Form (B- Form) விண்ணப்பிக்கவும்” என கூறப்பட்டுள்ளது.