குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் – தென் ஆப்ரிக்காவில் தொடக்கம்!
கொரோனா 3ம் அலை குழந்தைகளை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி:
2019ம் ஆண்டின் இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்தது. இதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. முதல் மற்றும் இரண்டாம் அலையின் காரணமாக பலி எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து அரசு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வந்தது. முதல் மற்றும் இரண்டாம் அலை என உருமாறிய கொரோனா தொற்று 3ம் அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்டது.
Royal Enfield Himalayan விலை 2வது முறையாக அதிகரிப்பு – புதிய பட்டியல் இதோ!
அவ்வாறு பரவும் கொரோனா 3ம் அலை குழந்தைகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. ஆறு மாதம் முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 2,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஊடகங்கள் கூறிவருகின்றன.
2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – ICMR அறிக்கை!
தரவுகளின் படி தென் ஆப்ரிக்காவில் 28 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் குழந்தைகளுக்கான தடுப்பூசி கியூபா, கனடா, அமெரிக்கா, ஐக்கிய அமீரகம், சீனா ஆகிய நாடுகளும் செலுத்தி வருகின்றன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா முதலியன முதல் 5 இடங்களில் இருக்கிறது.