மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கல் – அரசுக்கு உத்தரவு!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.133 கோடி ஒதுக்கப்பட்ட கொரோனா நிவாரணத் தொகை முழுமையாக வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நிவாரண தொகை :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு நடவடிக்கையாக அரசு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் சிரமப்பட்டனர். எனவே அரசு சார்பில் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கொரோனா நிவாரணத் தொகை ரூபாய் 4000 மற்றும் 14 வகை மளிகை பொருட்களை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அதே போல் மாற்று திறனாளர்களும் கொரோனா நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது.
TCS நிறுவன அமெரிக்க கிளையில் 220 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய திட்டம்!
அதன் படி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூபாய் 133 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்ததது. இந்த தொகையில் ரூபாய் 64.42 கோடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 73 கோடி ரூபாய் வழங்கப்படாமல் உள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரபட்டது. ஊரடங்கில் மாற்று திறனாளர்கள் முகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு உள்ளபட்டுள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
இந்த நிலையில் மாற்று திறனாளிகளின் கொரோனா நிவாரண நிதி குறித்து வழக்கு விசாரணையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கிய கொரோனா நிவாரண நிதி ரூ.133 கோடியை முழுமையாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஒதுக்கீடு செய்த நிவாரண தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க தமிழக அரசு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.