TCS நிறுவன அமெரிக்க கிளையில் 220 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய திட்டம்!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், தொழிலை விரிவாக்கம் செய்ய 300 மில்லியன் டாலர் செலவில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் 220 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விளங்கும் டிசஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதில், இந்த நிறுவனம் தொழில் விரிவாக்கம் செய்ய அரிசோனா மாகாணத்தில் 300 மில்லியன் டாலர் (சுமார் 2,236 கோடி ரூபாய்) முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் 2023 ஆம் ஆண்டு 220க்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அரிசோனாவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஜல்வி திட்டங்களை தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் ஆசிரியர் பயிற்சி, மாணவர்களுக்கான ஆன்லைன் தகவல்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிகரிக்கப் போவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.தற்போது அரிசோனாவில் டிசிஎஸ் நிறுவனத்துக்கு சுமார் 750க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 21,500க்கு மேற்பட்டோருக்கு டிசிஎஸ் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.