இந்தியாவில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா – 47 பேர் பலி!
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 20,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல புதிதாக 47 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் சேதாரங்களை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனாவின் மூன்றாம் அலை தாக்கம் கடந்த சில மாதங்களுக்கு முன் பரவி வந்த நிலையில் அதன் பின் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அதன் படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன் படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 20,038 பேர் பாதித்துள்ளனர். அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,37,10,027 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் புதிதாக 47 பேர் இறந்துள்ளனர். அதனால் நாட்டில் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,604 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 16,994 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!
இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,30,45,350 ஆக உயர்ந்துள்ளது. அதன் படி நாடு முழுவதும் குணமடைந்தோர் விகிதம் 98.48% ஆக உயர்ந்துள்ளது. அதே போல உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது. மேலும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.32% ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,39,073 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.