புதிய கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் – மத்திய அரசு வெளியீடு!!
கொரோனா இரண்டாம் பரவலை தடுப்பதற்கான புதிய வழிமுறைகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதனை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இதனால் நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனை தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு மத்திய, மாநில அரசு மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
தமிழகத்தில் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!!
தினம்தோறும் மக்களுக்கு தேவையான நெறிமுறைகளை அரசு வெளியிட்டு வருகின்றது. இந்த புதிய நெறிமுறைகளை மத்திய அரசுக்கான முதன்மை அறிவியல் ஆலோசனை அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகள்
- காற்றோட்டம் உள்ள இடங்கள் தான் நம்மை பாதுகாக்கும்.
- நாம் இருக்கும் இடங்களில் ஜன்னல்கள் ஆகியவற்றை எப்போதும் திறந்து வைத்திருத்தல் அவசியம்.
- எக்ஸாஸ்ட் மின்விசிறியை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
- வெளிக்காற்று வீட்டிற்குள் நுழைவது போல பார்த்து கொள்ள வேண்டும்.
- அலுவலக அறைகளை எப்போதுமே திறந்து வைத்திருத்தல் அவசியம்.
இதனை மக்கள் எப்போதும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.