தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் – ஒருங்கிணைப்பு குழு அதிகாரிகள் நியமனம்!!
கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான ஒருங்கிணைப்பு அதிகாரிகளை முதல்வர் முக ஸ்டாலின் நியமித்துள்ளார்.
அரசின் செய்திக்குறிப்பு:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசுடன் இணைந்து செயல்படுவதற்காக அமைக்கப்ட்டுள்ள குழுக்களுக்கு ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னார்வ தொண்டு நிறுவங்களுக்கான அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் மே 19ம் தேதி நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
அந்த கூட்டத்தில், பேசிய முதல்வர் கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் இணைந்து செயல்பட தன்னார்வ தொண்டு நிறுவங்களை கேட்டுக் கொண்டார். மேலும் இந்த பணிகளை ஒருங்கிணைக்க மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். தற்போது, அந்த ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் லஷ்மிபிரியா ஐஏஎஸ், பொதுத்துறை (சட்டம் ஒழுங்கு) அரசு துணைச் செயலாளர் எஸ்.பி.அம்ரித் ஐஏஎஸ், தமிழக ஊராக புத்தாக்கத்திட்ட மாவட்ட வருவாய் அலுவலர், எஸ். சாந்த குமார், தமிழ்நாடு மின்னணு நிறுவன மாவட்ட வருவாய் அலுவலர் எம்.கண்ணன் ஆகிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முழு ஊரடங்கு உத்தரவு மே 30 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
இந்த ஒருங்கிணைப்புக் குழு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தேசிய சுகாதார இயக்க வளாகத்தில் இயங்கி வரும் கட்டளை மையத்தில் தனது பணிகளை மேற்கொள்ளும். தனியார் தொண்டு நிறுவனங்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் மாநில ஒருங்கிணைப்புக் குழுவைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.