முழு ஊரடங்கு உத்தரவு மே 30 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0
முழு ஊரடங்கு உத்தரவு மே 30 வரை நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
முழு ஊரடங்கு உத்தரவு மே 30 வரை நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
முழு ஊரடங்கு உத்தரவு மே 30 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கேரள மாநிலத்தில் ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கு உத்தரவானது தற்போது மே 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று புதிய பாதிப்புகள் எண்ணிக்கை சற்று குறைந்து வந்தாலும், உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க பல்வேறு மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மே 30 வரை கேரளாவில் கோவிட் -19 முழு ஊரடங்கு விதிமுறைகள் தொடரும் என்று முதல்வர் பினராயி விஜயன் இன்று அறிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் ரூ.99,122 கோடி உபரி நிதி – மத்திய அரசுக்கு வழங்க ஒப்புதல்!

புதிய பாதிப்பு எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய இடங்களில் மூன்றடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தியுள்ளது. இருப்பினும், மலப்புரம் மாவட்டத்தில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட விதிமுறைகள் தொடரும். தொற்றுநோய் பரவுதல் விகிதம் அம்மாவட்டத்தில் அதிகமாக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காவல்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு இயக்குநர் மலப்புரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஊரடங்கு விதிமுறைகளை கண்காணிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். நாட்டிலேயே முதல் கொரோனா பாதிப்பு கேரள மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அம்மாநில அரசு எடுத்த துரித நடவடிக்கைகள் காரணமாக பெருமளவு பாதிப்புகள் தடுக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!