ரிசர்வ் வங்கியின் ரூ.99,122 கோடி உபரி நிதி – மத்திய அரசுக்கு வழங்க ஒப்புதல்!

1
ரிசர்வ் வங்கியின் ரூ.99,122 கோடி உபரி நிதி - மத்திய அரசுக்கு வழங்க ஒப்புதல்!
ரிசர்வ் வங்கியின் ரூ.99,122 கோடி உபரி நிதி - மத்திய அரசுக்கு வழங்க ஒப்புதல்!
ரிசர்வ் வங்கியின் ரூ.99,122 கோடி உபரி நிதி – மத்திய அரசுக்கு வழங்க ஒப்புதல்!

ரிசர்வ் வங்கியின் இயக்குநரவை கூட்டத்தில் ரூ.99,122 கோடி உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்க ஒப்புதல் அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குநரவை கூட்டம்:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்ததால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்தது. இந்தியா மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்தது.

கருப்பு பூஞ்சையை தடுக்கும் முக்கிய வழிமுறைகள் – எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்!!

இதனால் இரண்டாம் அலையில் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கும் திட்டம் இல்லை என்று பிரதமர் மோடி அறிவித்தார். முதல் ஊரடங்கில் ஏற்பட்ட பொருளாதார இழப்பையே இன்னும் ஈடு செய்ய முடியாமல் உள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறினார்கள். ரிசர்வ் வங்கியின் இயக்குநரவை கூட்டம் அதன் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் காணொளி முறையில் இன்று நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

கூட்டத்தில் நாட்டின் பொருளாதார நிலை, உள்நாட்டிலும், உலக அளவிலும் உள்ள சவால்கள், மேலும் இரண்டாவது அலையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 2021 மார்ச் மாத நிலவரப்படி, ரிசர்வ் வங்கியில் குவிந்துள்ள 99,122 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!