கருப்பு பூஞ்சையை தடுக்கும் முக்கிய வழிமுறைகள் – எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்!!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்களை, கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்கி வருகிறது. இந்த நோயை தடுக்கும் சில முக்கிய காரணிகள் குறித்து எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம் கொடுத்துள்ளார்.
நோய் தடுப்பு காரணிகள்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை மியூகோமைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை தாக்கி வருகிறது. இந்த புதிய பாதிப்பு பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் தாக்கம் இதுவரை சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களிடத்தில் அதிகளவு கன்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முறையான சிகிச்சைகளை மேற்கொண்டால் இந்த நோயை குணப்படுத்தலாம் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் 80 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழப்பு – WHO தகவல்!!
இந்த நிலையில் கொரோனா நோயாளிகளை தாக்கும் கருப்பு பூஞ்சையிலிருந்து பாதுகாத்து கொள்ள மூன்று முக்கிய வழிமுறைகள் குறித்து டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் அதிகளவு பரவிய போதே கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படத் துவங்கியது.
TN Job “FB
Group” Join Now
பொதுவாக கொரோனா நோயாளிகளுக்கு நீரிழிவு அதிகமாகும் போது கருப்பு பூஞ்சை நோயும் அதிகரிக்கிறது. இதன் பாதிப்பை ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும். இதை தடுப்பதற்கு இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மேலும் ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொள்பவர்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கண்காணித்து வர வேண்டும். தொடர்ந்து ஸ்டீராய்டுகளை எந்த அளவு, எப்போது கொடுக்க வேண்டும் என்பதில் கருத்துடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.