உலகம் முழுவதும் 80 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழப்பு – WHO தகவல்!!
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 60 லட்சம் முதல் 80 லட்சம் பேர் வரை இறந்திருக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம்:
கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து கடந்த வருடம் பரவ தொடங்கியது. உலகம் முழுவதும் பரவி அதிக இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இத்தாலி, அமெரிக்க போன்ற நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கி அதிக உயிர்களை இழந்தது. மற்ற நாடுகளிலும் இதன் பாதிப்பு இருந்தது. உலக சுகாதார அமைப்பு நாடுகளுக்கு நோய்த்தடுப்பு ஆலோசனைகளை வழங்கி வந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது இரண்டாம் அலையாக உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கடந்த வருடத்தை விட தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பேரதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஒரு பெரும் உயிர்கொல்லி நோயாகும். வயதானவர்களுக்கு இந்நோய் எளிதாக பரவி அவர்களை உயிரிழக்க செய்கிறது. மக்கள் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் இழந்து வருகின்றனர்.
தமிழக விவசாயிகளுக்கு உதவி தொலைபேசி எண் – வேளாண்துறை வெளியீடு!!
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் கொரோனா தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் 80 லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் என கூறுகிறது. பதிவு செய்யப்படாத கொரோனா பாதிப்புகள், மருத்துவமனை பற்றாக்குறை, பலி எண்ணிக்கை மற்றும் பிற காரணங்களால் இந்த இறப்பு எண்ணிக்கை ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 60 லட்சம் முதல் 80 லட்சம் பேர் வரை இறந்திருக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகாரபூர்வ தகவல்களின் படி இதுவரை 34 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் தற்போது இந்த தகவலை அளித்துள்ளது.