இந்தியாவில் ஒரே நாளில் எகிறிய கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,819 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளது. மேலும், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாகவே பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் புதிதாக 18,819 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும், கேரளாவில் 1,945 பேரும், மகாராஷ்டிராவில் 3,957 பேரும், கர்நாடகாவில் 1,945 பேரும், தமிழகத்தில் 1,827 பேரும், மேற்கு வங்கத்தில் 1,424 பேரும் ,டெல்லியில் 1,109 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,52,164 ஆக உயர்ந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,25,116 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 1,04,555 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் நேற்றை விட இன்று உயர்ந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 13,827 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 4,28,22 ,493 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14,17,217 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
தமிழக மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை – முக்கிய தகவல் வெளியீடு!
இதுவரை 197,61 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 86.23 கோடி மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அதிகரித்து வரும் பாதிப்புகளை கட்டுப்படுத்த மக்கள் அரசின் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. தற்போது வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் ஆலோசனைகளை நடத்தி கட்டுப்பாட்டுகளை அறிவித்து வருகின்றனர்.