தமிழக மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை – முக்கிய தகவல் வெளியீடு!
அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மேற்படிப்புக்காக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த உதவித்தொகை குறித்தான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.1000 உதவித்தொகை:
மேண்டோ (MANDO) ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் கல்வி துறை அதிகாரிகளுடன் சில ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அதாவது, சென்னை தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்தாண்டு முதல் சான்ட்விச் (sandwich) பாடப்பிரிவுகள் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தாண்டு முதலே சான்ட்விச் (sandwich) பாடப்பிரிவிற்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
மேலும், இந்த சான்ட்விச் பாடப்பிரிவில் சேரும் மாணவர்கள் மூன்றரை வருடம் அதாவது 7 செமஸ்டர் படிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 செமஸ்டரில் 2 செமஸ்டர் மேண்டோ கம்பெனியில் சென்று பயிற்சி எடுத்துக்கொள்வார்கள். அதாவது, 2 ஆவது செமஸ்டரும், 4 ஆவது செமஸ்டரும் மேண்டோ கம்பெனிக்கே சென்று மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள். மேலும், பயிற்சி காலங்களில் மாணவர்களின் விடுதி செலவுகள், படிப்பு செலவுகள் என அனைத்து செலவுகளையும் மேண்டோ கம்பெனியே ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை அடுத்து புதிதாக பரவும் ஆந்த்ராக்ஸ் நோய் – எச்சரிக்கும் சுகாதாரத்துறை!
இதனுடன், இந்த பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மேண்டோ கம்பெனியிலேயே பணியாற்றும்படியான வாய்ப்புகளையும் உருவாக்கி தருகின்றனர். மேலும், இந்த கூட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று மேற்படிப்பு படிக்க இருக்கும் மாணவிகளின் ரூ.1000 உதவித்தொகை குறித்தான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற கிட்டதட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், தகுதியுள்ள மாணவிகள் விரைவில் விண்ணப்பிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.