டிச.25க்கு முன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு முக்கிய ஆலோசனை! ஒமிக்ரான் பரவல் எதிரொலி!
இங்கிலாந்தில் ஒமிக்ரான் வைரஸ் மாறுபாட்டின் புதிய தாக்கம் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
முழு ஊரடங்கு
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் தொற்று தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளை ஆக்கிரமித்துள்ளது. கொரோனா வைரஸின் மற்ற மாறுபாடுகளை விட அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இவ்வகை ஒமிக்ரான் வைரஸ் இங்கிலாந்து நாட்டில் அதிக வேகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது. இதுவரை இந்த நோய் தொற்றால் 37,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் 12 பேர் மரணமடைந்துள்ளனர். அதனால் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிப்பது குறித்த ஆலோசனையில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
சம்பள கணக்கில் PF வைத்திருப்போர் கவனத்திற்கு – டிச.31ம் தேதிக்குள் ‘இது’ கட்டாயம்!
இது தொடர்பாக பிரிட்டன் துணைப் பிரதமர் டொமினிக் ராப் கூறுகையில், கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட 12 பேர் இறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இங்கிலாந்தில், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் இரண்டு வார சர்க்யூட்-பிரேக்கர் ஊரடங்கு பற்றிய அறிக்கைகளுக்கு மத்தியில் அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இப்போது பிரிட்டனில் கொரோனா தொற்று புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தாலும் சமீபத்திய அலையின் முழு விளைவும் இன்னும் வெளியாகவில்லை என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஒமிக்ரான் புதிய மாறுபாட்டால் ஏற்படும் நோயின் தீவிரம் தெளிவாக இல்லை என்றாலும், இதன் இறப்புகள் வரவிருக்கும் நாட்களில் கடுமையான நடவடிக்கைகளை தேர்வு செய்ய அரசாங்கத்தை உந்தித்தள்ளும் என்றும் அறிக்கைகள் கூறுகிறது. இதற்கிடையில் இங்கிலாந்து முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது குறித்து துணைப் பிரதமர் கூறுகையில், ‘என்னால் கடினமான மற்றும் விரைவான உத்தரவாதங்களை சொல்ல முடியாது.
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – My Contacts Except விரைவில் அறிமுகம்!
கொரோனா தொற்றின் நிலைமையை மதிப்பிடுவதில் வரும் உண்மையான தரவுகளை கொண்டும், அதன் தீவிரத்தன்மையை கொண்டும் தான் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார். இதற்கிடையில் கடந்த வாரம், பிரிட்டிஷ் ஊடகங்கள் அவசர நிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழு கூட்டத்தில், லேசான வழிகாட்டுதல் முதல் ஊரடங்கு வரையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.